கண்ணன் விஸ்வகாந்தி
வசிப்பது சேலம், தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில்.
முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது.
செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் கவிதைகள் வெளியாகி உள்ளது.
இதுவரை கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை', 'அதீதத்தின் பசி' என்று மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
'கறுப்பு வட்டமடித்த இரும்புக் கதவுகள்,' 'தாழ்வரை' என ஒரு சிறுகதைத் தொகுப்பும் நாவலும் வெளியாகியுள்ளன.
மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'அதீதத்தின் பசி' நூலுக்கு இந்த ஆண்டின் சௌமா விருது பெறுகிறார்