சீர்மை கடந்த ஐந்தாண்டுகளாக மிக முக்கியமான நூல்களைத் தமிழில் வெளியிட்டு வந்திருக்கிறது. அறபி, பாரசீகம் போன்ற மூலமொழிகளிலிருந்து முக்கியமான பிரதிகள் தமிழுக்கு வரத்தாகி வளம் சேர்த்துள்ளன. அரசியல், ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், சினிமா, மெய்யியல், சிறுவர் இலக்கியம் என விரிந்த பொருண்மையில் தொடர்ந்து செயற்பட்டுவருகிறது. தற்போது சீர்மை இணைய இதழையும் தொடங்குகிறது. அநேக இணைய இதழ்கள் ஏற்கெனவே தமிழ் இலக்கியச் சூழலில் செறிவாக இயங்கிக்கொண்டிருக்க, சீர்மை தன்னால் இயன்ற புதுமை முயற்சிகளோடும் புதியவர்களை எழுதவைக்கும் முனைப்போடும் செயலாற்ற முன்வந்துள்ளது.
சிற்றிதழ் மரபின் அறிதலும் பார்வையும் கொண்டு, காலத்தேவைக்கு ஏற்ப பரவலான இலக்கிய வாசகத் தரப்பைத் தொடும் நோக்கோடு சீர்மை இணைய இதழ் விரிய விரும்புகிறது.

அருண்பாண்டியன் மனோகரன்
கு. இலக்கியன்
நஜீப் மஹ்ஃபூழ்
தி. மரிய தனராஜ்
து. பிரபாகரன்
க. திருமூர்த்தி