ஃபௌத் அல்-திக்கிரிலி (1927 – 2008) ஈராக் நாட்டைச் சார்ந்தவர். சட்டம் பயின்ற இவர் நீதிமன்றத்தில் நடுநிலை தவறாத நீதிபதியாக சில ஆண்டுகள் செயல்பட்டவர். பின்பு எழுத்துப்பணியைச் செய்வதற்க்கென்றே தனது வேலையிலிருந்து விலகியவர். இவருடைய முக்கியமான புதினமாக கருதப்படுவது The Long Way Back என்பதாகும். இது ஈராக் நாட்டில் முடியாட்சிக்குப் பிறகான நான்கு ஆட்சி மாற்றங்களையும் அந்த ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்த புதினமாகும். ஈராக் நாட்டில் போர்ப்பதற்றம் ஏற்பட்ட நேரத்தில் ஜோர்டன் நாட்டிற்குக் குடிபெயர்ந்திருந்தவர் கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்கேயே தனது எண்பதாவது வயதில் இறந்தார்.